மூன்று சக்கர வாகனம் வைத்துள்ள மாற்று திறனாளிகளுக்கு மகளிர் திட்ட பணம் கிடையாது! 

மூன்று சக்கர வாகனம் வைத்துள்ள மாற்று திறனாளிகளுக்கு மகளிர் திட்ட பணம் கிடையாது! 

  டி.இ.முகமது,

 மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் கூடுதல் சக்கரம் பொருத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை நான்கு சக்கர வாகனம் இருப்பதாகக் குறிப்பிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

  சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தனர். ஆனால் அதில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை அதற்கான காரணத்தை இணையதளத்தில் பார்த்த போது தங்களுக்கு நான்கு சக்கர வாகனம் உள்ளதால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்களில் அவர்கள் பாதுகாப்பு நலன் கருதி வாகனத்தின் இருபுறமும் கூடுதலாக இரண்டு சக்கரங்கள் இணைக்கபட்டுள்ளன.

இதனை நான்கு சக்கர வாகனங்களாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அதனை நான்கு சக்கர வாகனம் என கருதி மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது,

மாற்றுத் திறனாளிகளின் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களாகக் கருதப்படுவதால் அந்த வாகனங்களை வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளளன.

  மாற்றுத்திறனாளிகளில் தகுதியுடையவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.