தமிழக மக்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது! காங் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி!

தமிழக மக்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது! காங் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி!

கு.அசோக்,

 ஒன்றிய அரசு மாநில அரசை வஞ்சிக்கவில்லை மாற்றாக தமிழக மக்களை வஞ்சிப்பதாக ஆற்காடு அருகே நடைபெற்ற காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு.

 இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதி தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

 முன்னதாக அவருக்கு கிரேன் மூலமாக ராட்சத மாலை அணிவித்து பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

  அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்த போது, தமிழகம் முழுவதும் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதனைத்தொடர்ந்து கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து புதிய ரத்தம் பாய்ச்சி மாற்றி அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.

  மேலும் புதிய கல்விக் கொள்கையில் ஒன்றிய அரசு மாநில அரசை வஞ்சிப்பதாக நினைத்து வருகிறது. ஆனால் உண்மையில் தமிழக மக்களை தான் ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது.

  தொடர்ந்து ஜி.எஸ்.டி திட்டத்தில் அம்மையார் ஜெயலலிதா இணையவில்லை, உதய மின் திட்டத்தில் அம்மையார் ஜெயலலிதா அமையவில்லை. மாநில அரசு சார்பில் ஜி.எஸ்டி-யில் 20 ஆயிரம் கோடி ரூபாய் பங்களிப்பு அளிக்கப்பட்டது.

 ஆனால் ஒன்றிய அரசு சார்பாக இதுவரைக்கும் மாநில அரசுக்கு எதுவும் கிடைக்கவில்லை கூறினார்.

 மேலும் நீதி அரசர் முருகேசன் தலைமையில் கமிட்டி அமைத்து தமிழகத்திற்கு இந்த கொள்கை ஒத்து வராது எனக்கூறிய பின் ஒன்றிய அரசு கையெழுத்து போடாமல் நிதியை கொடுக்க மாட்டோம் என்று கூறுவது அடுத்த தலைமுறையை எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி வருகிறது என்றார்.

 பின்னர், குஜராத் மீனவர்கள் என்றால் பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் போவாங்க, இன்றைக்கு தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கிறார்கள், மாண்டு போகிறார்கள் அதைப்பற்றி மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம் தமிழக மீனவர்கள் ஒரு நியாயமா?

 தொடர்ந்து ஒன்றிய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது எனவும் அதேபோல் பாராளுமன்றம் மிகவும் வீக்காக உள்ளது என கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பாஜக ஆட்சியில் அனைத்துமே ஊழல்கள்தான். அதேபோல் பாராளுமன்றம் அனைத்தும் தண்ணீரில் மிதக்கும்.  இதுதான் பாஜக அரசின் ஸ்டைல் என சொன்னார்.