குடிமகன்களின் அட்ராசிட்டி!

ஜி.கே.சேகரன்,
பேருந்தில் குடிமகன்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள்.
திருத்தணியில் இருந்து பெங்களூர் செல்லும் (444) எண் கொண்ட அரசு பேருந்து வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மாதனூர் நிறுத்தத்தில் இரண்டு இளைஞர்கள் பேருந்தில் ஏறியுனர். பேருந்து சிறிது தூரம் சென்ற போது நடத்துனர் அவர்களிடம் டிக்கெட் எடுக்கசொன்னார்.
அப்போது இளைஞர் ஓருவர் மது போதையில் நான் யார் தெரியுமா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர் எனவும், என்னிடமே டிக்கெட் கேட்கிறாயா? மகளிர் போலவே நாங்களும் டிக்கெட் எடுக்க மாட்டோம்.
உன்னைப் போல் ஆயிரம் பேரை நான் பார்த்துள்ளேன் உன்னால் முடிந்தால் என்னை இறக்கி விட முடியுமா எனக் கூறி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த போதை இளைஞர்கள் வாணியம்பாடிக்கு டிக்கெட் எடுத்திருந்த நிலையில், பேருந்து நடத்துனர் அவர்களை ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார்.ரதன் பின்னர் பயணிகள் நீம்மதியாக பயணித்தனர்.