ஆட்டோ கவிழ்ந்து பள்ளி குழந்தைகள் காயம்! ஓடி ஓடி சோதனை செய்த போலிஸ்!!

கு.அசோக்,
தூய நெஞ்சக் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கடை தெருவில் நேற்று பத்து பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றபோது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதன் காரணமாக பள்ளி குழந்தைகள் லேசான காயம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காளியப்பன் நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி உள்ளிட்டோர் ஆட்டோ, இலகுரக லோடு வாகனங்கள் ட்ராக்டர் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு உரிய ஆவணங்கள் ஓட்டுனருக்கு லைசென்ஸ் உள்ளிட்டவைகள் உள்ளனவா என சோதனையிட்டனர்.
இந்த சோதனையின் போது சுமார் 25க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கும் 10க்கும் மேற்பட்ட இலகு ரக வாகனங்களுக்கும் 15க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று தொடர் சோதனைகளை துறை சார்ந்தவர்கள் மேற்கொண்டால் பொதுமக்களுக்கும் ஓட்டுனர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும் என்று பலர் கருத்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.