வேலூர் எஸ்.பி.உட்பட 12 ஐ.பி.எஸ் அலுவலர்கள் பணியிடமாற்றம்!

மிகுஒளியான்,
வேலூர் எஸ்.பி.யாக பணியாற்றிக் கொண்டிருந்த எஸ்.செல்வக்குமார் உள்ளிட்ட 12 ஐபிஎஸ் அலுவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர ஆணையராக இருந்து வரும் தீபக் எம்.தாமோர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல் ஆணையாராக பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு மண்டல காவல்துறை இணை ஆணையராக பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் எஸ்பியாக செல்வக்குமாருக்கு பதில், எஸ்.ராஜேஷ்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி எஸ்பியாக மூர்த்திக்கு பதிலாக சுஜித்குமார் நெல்லை எஸ்பியாக மணிவண்ணனுக்கு பதில் சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.