34 ஆண்டுகளாகியும் பத்திரத்தை திருப்பித்தராத பேங்க்! விவசாயிகளுக்கு வாக்குறுதி தந்த மாவட்ட ஆட்சியர்!

34 ஆண்டுகளாகியும் பத்திரத்தை திருப்பித்தராத பேங்க்! விவசாயிகளுக்கு வாக்குறுதி தந்த மாவட்ட ஆட்சியர்!

 ஜி.கே.சேகரன்,

 34 ஆண்டுகளாகியும் பத்திரத்தை திருப்பிதராத பேங்க் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் சொன்ன விவசாயிகளுக்கு உடனே அதை மீட்டுக் கொடுப்பதாக வாக்குறுதி தரப்பட்டது. சாதாரணமாக இருந்தவர் நிதி அமைச்சராக இருக்கிறார்கள் அதே போல் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டத்தை செயல்படுத்தி எண்டர்பிரைசஸ் அமைத்துக் கொடுத்தால் 3500 நிதி அமைச்சர்களை உருவாக்க முடியும் விவசாயிகள் குறைத்து நாள் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம்,

 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

   மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு நிறை குறைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்று அதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

   அப்போது மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த விவசாயி அம்பலூர் அசோகன் என்பவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3500 சுய உதவிக் குழுக்கள் உள்ளன. அந்த குழுக்களில் உள்ள பெண்கள் தயாரிக்கும் பொருளை சந்தை படுத்தவோ மதிப்பு கூட்டி விற்பனை செய்யவும் எல்லா மாவட்டத்திலும் இருப்பது போல் நம்முடைய மாவட்டத்திலும் ஊரக புத்தாக்க திட்டத்தை செயல்படுத்தி எண்டர்பிரைசஸ் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

  அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில் சாதாரண வியாபாரியாக இருந்தவர் நிதி அமைச்சர் ஆனது போல் 3500 நிதி அமைச்சர்களை உருவாக்க முடியும்.

   கடுமையான வறட்சியின் காரணமாக யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 89 , 90 களில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட கடனுக்கு உத்திரவாதமாக வாங்கப்பட்ட பத்திரங்களை தற்போது வரை எந்த விவசாயிகளுக்கும் திருப்பி கொடுக்கவில்லை.

   இதனால் அந்த நிலத்தை பாகப்பிரிவினை செய்வதற்கோ அல்லது பிள்ளைகளுக்கு எழுதி கொடுப்பதற்கோ முடியவில்லை உடனடியாக விவசாயிகளுக்கு சேர வேண்டிய பத்திரத்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

  இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பதில் கூறுகையில் உடனடியாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பொழுது விவசாயிகள் கூட்டத்தின் மத்தியில் கரகோஷம் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  இந்த விவசாயிகள் நாள் கூட்டத்தில் அரசு துறை சார்ந்த வேளாண்துறை வருவாய் துறை மின்சார துறை காவல்துறை வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

 வேலூர் மாவட்டம்

 அதே போல்  வேலூரில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்  - நடைபெற்றது.

  வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு  நாள் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் பலதுறைகளை சார்ந்த அரசு அதிகாரிகளும் விவசாயிகளும் பங்கேற்றனர்

    இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில் வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்ற ஒரு மாதத்தில் திருவள்ளூவர் மாவட்ட குறைதீர்வு கூட்டத்தில் உழவன் நலன் காக்கும் கூட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  அதே போல் இங்கும் பெயர் மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் உழவர் நலன் காக்கும் கூட்டமாக அறிவிக்கபடும் என ஆட்சியர் அறிவித்தார்.

 தமிழக அரசு ஏரியில் வண்டல் மண் அள்ள ஒப்புதல் அளித்தது அதனை முழுமையாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் கண்காணிக்க வேண்டும். அதனை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது. செங்கல் சூளைக்கும் மண் அள்ளபடுகிறது. இதனை தடுக்க வேண்டும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டுமென பேசினார்கள்.

   இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய்  அலுவலர் மாலதி பேசுகையில் அதிகாரிகள் கூட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் இடையில் செல் போனை பயன்படுத்த கூடாது அடுத்த முறையிலிருந்து அதிகாரிகள் ஓர் இடத்தில் செல்போனை வைத்துவிட்டு அவசியம் என்றால் மட்டுமே பயன்படுத்த அனுமதிப்போம் என பேசினார்.