தொடங்கியது உலககோப்பை கால்பந்து போட்டி! சொந்த மண்ணில் தோற்ற கத்தார்!

ம.பா.கெஜராஜ்,
2022 ஆம் ஆண்டு ஃபிஃபா உலககோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் தொடங்கியது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தொடரில் இம்முறை 32 அணிகள் பங்கேற்கின்றன. உலகத்திலேயே அதிக மக்களால் பார்க்கப்படும் தொடர் என்ற சாதனையை ஃபிஃபா உலக கோப்பை தொடர் பெற்று வருகிறது.
இந்த தொடரில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரேசில் அணி ஃபிஃபா உலககோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆர்ஜென்டினாவின் மெஸ்ஸி, போர்ச்சுக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தங்களது கடைசி உலககோப்பையில் விளையாடுகிறார்கள்.இதனால் இம்முறையாவது கோப்பையை அவர்கள் வெல்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஸ்போர்ட்ஸ் 18 என்ற சேனல் உலககோப்பை போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அதே போல், ஜியோ சினிமா ஓடிடியிலும் கண்டு களிக்கலாம்.
இந்நிலையில் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் கத்தார் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணி வீழ்த்தியது. இரண்டாம் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில், கத்தார் அணி இரண்டு மாற்றங்களை செய்துள்ளது.
கேப்டன் ஹசன் மற்றும் அனுபவ வீரர் அலி ஆகியோருக்கு பதிலாக முகமது வாத் மற்றும் முகமது முன்டாரி ஆகியோர் களம் புகுத்தப்பட்டனர்.
முதல் பாதி ஆட்ட நேர முடிவில் ஈகுவடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் தொடர்ந்து முன்னிலையில் இருந்தது.
முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் கோல் அடிக்க கிடைத்த சிறந்த வாய்ப்பை கத்தார் அணி தவறவிட்டது.ஈகுவடார் அணியின் அனுபவ வீரர் வெலன்சியா 31வது நிமிடத்தில் 2வது கோலை அடித்து அசத்தினார்.
இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணி தொடர்ந்து முன்னிலையில் வகித்தது.
கத்தார் அணியின் அல்மொய்ஸ் அலிக்கு நடுவரால் மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. ஈகுவடார் அணியின் அபார ஆட்டத்தால், கத்தார் அணி திணறியது. உலகக்கோப்பைத் தொடரின் முதல் கோலை அடித்து அசத்தினார் ஈகுவடார் அணியின் வெலன்சியா.
ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே ஈகுவடார் அணியின் நட்சத்திர வீரர் வேலன்சியா முதல் கோலை அடித்தார். ஆனால் அதனை நடுவர்கள் ஆஃப் சைட் கொடுத்தனர்.
ஈகுவடார் அணி 4-4-2 ஃபார்மேஷனிலும், கத்தார் அணி 5-3-2 ஃபார்மேஷனிலும் களமிறங்கியுள்ளன ஈகுவடார் அணி 4-4-2 ஃபார்மேஷனிலும், கத்தார் அணி 5-3-2 ஃபார்மேஷனிலுன் களமிறங்கின.
உலககோப்பை பொறுப்பை ஏற்று நடத்தும் கத்தார் முதல் போட்டியில் சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது.