38 ஆம் ஆண்டு சறுக்கு மரம் விளையாட்டு!

கு.அசோக்,
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வேலூரில் சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் கிருஷ்ணர் கோயிலில் 38 ஆம் ஆண்டாக கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர்.
சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் அப்பகுதி இளைஞர்கள் குழுவாக செயல்பட்டு ஆர்வமுடன் சறுக்கு மரம் ஏறினர்.நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தண்ணீரை சறுக்கும் மரம் ஏறும் இளைஞர்கள் மீது ஊற்றி இடையூறு செய்தும் விடாது 2 மணி நேரமாக போராடிஇளைஞர்கள் சறுக்கு மரத்தின் உச்சியில் இருந்த பரிசு பொருள்களை எடுத்தனர்.
சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியினை காண அப்பகுதியில் கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியை ஆர்வமுடனகண்டு ரசித்தனர்.