பேருந்தை ஓடிப்பிடித்து தேர்வெழுதிய மாணவி தேர்ச்சி பெற்றார்!

ஜி.கே.சேகரன்,
நிறுத்தாத பேருந்தை துரத்திப்பிடித்து தேர்வுக்கு சென்ற மாணவி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி சுஹாசினி. கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி கடைசி தேர்வின் போது பேருந்துக்காக காத்திருந்த போது அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் நீண்ட தூரம் பேருந்து பின்னால் ஓடி சென்று தேர்வு எழுதினார்.
தற்போது அந்த மாணவி தேர்வில் வெற்றி பெற்று 437 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் அவரை பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
தன் தாயை இழந்து தன் அப்பாவுடன் வசித்து வரும் மாணவி சுகாசினி தனது மேற்படிப்பிற்கு அரசு உதவி செய்யுமாறும், தனது பகுதியில் அரசு பேருந்துகள் அதிகளவு இயக்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவர்களுக்காக நின்று செல்ல வேண்டும் எனவும் மாணவி சுகாசினி கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவியை ஓடவிட்ட ஓட்டுநர் அப்போதே சஸ்பெண்டு செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கதாகும்.