மகத்தான திட்டங்கள்! அமைச்சர் ஆர்.காந்தி பெருமை!

கு.அசோக்,
தமிழகத்தில் 4 ஆண்டு ஆட்சிகாலத்தில் இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் நடக்காத அளவிற்கு மகத்தான திட்டங்களை திட்டி நிறைவேற்றி காட்டியவர் முதல்வர் என அமைச்சர் ஆர் காந்தி அவசர செயற்குழு கூட்டத்தில் பேச்சு.
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை திமுக தலைமை அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது தமிழகத்தில் 4 ஆண்டு ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் நடக்காத அளவிற்கு மகத்தான திட்டங்களை திட்டி நிறைவேற்றிக் காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என பெருமிதமாக கூறினார்.
அதேபோல் நாடு போற்றும் நான்காண்டு சாதனை தொடரட்டும் பல்லாண்டு கழக பொதுக்கூட்டங்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட வேண்டும் எனவும் ஜூன் 1-ஆம் தேதி அன்று பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெறுவதால் அனைத்து கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.