பொறுப்பான சட்டமன்ற உறுப்பினர்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
இராஜபாளையம் தொகுதியில் இன்று (01.11.2022) உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் செட்டியார்பட்டி பேரூராட்சி, 9வது வார்டு, பிள்ளைமார் சமூக மண்டபத்தில் வைத்தும் காலை 11.00 மணியளவில் சேத்தூர் பேரூராட்சி, கோட்டைவிநாயகர் கோவில் அருகிலுள்ள மண்டபத்தில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் பேசிய சட்டமன்ற உறுப்பினர், இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை நடப்பது போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் மக்களில் குறைகளை கண்டறிய நமது தமிழக முதல்வர் அவர்கள் சென்னையில் பகுதி சபா கூட்டத்தை தொடங்கி வத்திருக்கிறார்.
எனவே இன்று கிராமங்களில் நடப்பது போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் நகர் பகுதிகளில் நடைபெறும் இக்கூட்டம் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.
மேலும் செட்டியார்பட்டியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் சந்தானலட்சுமி என்பவர் கூறியதாவது காலை நாளிதழில் நம் தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதி சபா கூட்டம் மக்களிடையே வரவேற்கத்தக்கதென்றும் இதனால் எங்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி என்றும் கூறி முதல்வர் அவர்களை பாராட்டி வாழ்த்தினார்.
அதைனை தொடர்ந்து புத்தூர் ஊராட்சியிலும் நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி பல்வேறு கோறிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு சட்டமன்ற உறுப்பினர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் செ.கனகராஜ், பேரூராட்சி சேர்மன்கள் ரா.ஜெயமுருகன், இ.பாலசுப்பிரமணியன், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், செயல் அலுவலர்கள் சந்திரகலா, வெங்கிடகோபு, பேரூர் கழக செயலாளர் க.இளங்கோவன், பேரூராட்சி துணை தலைவர் விநாயகமூர்த்தி, காளீஸ்வரி, ஒன்றிய துணை செயலாளர் குமார், புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், கிளர்க் கருப்பசாமி, நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு/கிளை செயலாளர்கள், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.