ரோப் கார் சேவை நான்கு மணி நேரம் நிறுத்தம்! சோளிங்கர் கோவிலில் பக்தர்கள் அவதி!

கு.அசோக்,
பலத்த காற்றின் காரணமாக சோளிங்கர் ரோப் கார் சேவை நான்கு மணி நேரம் நிறுத்தம் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானயோக லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலில் கார்த்திகை மாதத்தில் கண் திறந்து பக்தர்களுக்கு நரசிம்மர் அருள் பாலிப்பார் என்பது ஐதீகம்.
இதன் அடிப்படையில் ஆந்திரா கர்நாடகா தமிழகத்தின் பிற மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களுக்கு வசதியாக ரோப் கார் வசதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் புயலின் காரணமாக சோளிங்கர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக ரோப் கார் சேவையானது 4 மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் பக்தர்கள் கடும் இன்னலுக்குள் ஆளாகினர். மேலும் காற்று வேகம் குறையும்போது ரோப்கார் இயக்கப்படுகிறது. இதன்காரணமாக ரோப்காரில் செல்லும் பக்தர்கள் படி ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.