எதுவானாலும் கலெக்டரிடம் தெரிவியுங்கள்! திருப்பத்தூர் அரசு நிகழ்ச்சியில் பேச்சு!

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் பொம்மிக்குப்பம் ஊராட்சியில் ஷாஜி திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சிற்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.நல்லதம்பி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள் பேசியதாவது:-
முன்மாதிரி கிராம திட்டத்தின் மூலமாக 42 திட்டங்கள் ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய், அத்தியாவசிய திட்டங்களை அறிந்து திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஷாஜி திட்டம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது முக்கிய காரணம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஊராட்சியை தேர்வு செய்து ஒவ்வொரு ஊராட்சிக்கும் சுமார் 5 கோடியிலிருந்து 10 கோடி ரூபாய் வரை நிதியை ஊராட்சிக்கு பெற்று திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வருடம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் பொம்மிகுப்பம் ஊராட்சியை தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 5 கோடி முதல் 10 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் அமைச்சராக மூன்று மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சராக செயல்பட்டு வருகிறார். நமது மாவட்டத்திற்கு மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் பொறுப்பு அமைச்சராக வந்தவுடன் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் மாதந்தோறும் மாவட்டத்திற்கு வருகை புரிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். நமது மாவட்டம் ஏற்கனவே படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது, ஆனாலும் அந்த முன்னேற்றம் விரைவான முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சரின் பரிந்துரைப்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவராக நியமித்து உள்ளார்கள்.
நமது மாவட்ட ஆட்சித்தலைவர் வந்த உடனே ஜாதி சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது, மக்களுடைய எண்ணங்களை அறிந்து மக்கள் பிரதிநிதிகள் எண்ணங்களை அறிந்து மக்களுக்கு நிறைந்த நலத்திட்ட உதவிகளை வழங்குகின்ற மாவட்ட ஆட்சித் தலைவராக செயல்பட்டு வருகிறார். நீங்கள் இன்று கொடுக்கின்ற மனுக்கள் அனைத்தும் விரைவில் திட்டங்களாக நலத்திட்ட உதவிகளாக உங்களை வந்தடையும். கடந்த ஆண்டு ஷாஜித் திட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஏலகிரி மலை கிராம ஊராட்சியை தேர்ந்தெடுத்து ரூபாய்.7 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்ற வருகிறது,
இதே போல் இன்று திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் பொம்மிகுப்பம் ஊராட்சியை தேர்வு செய்து திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்துகிற 90 சதவீத திட்டங்களில் பெண்களுக்கு சென்று சேர்கின்றது, இலவச பேருந்து பயணம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம், போன்ற பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய மக்களுக்காக செயல்படுத்து வருகிறார்.
வளர்ந்த நாடு, வளர்ச்சி பெற்ற நாடான அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த காலை உணவு திட்டத்தினை பின்பற்றி காலை உணவு திட்டத்தினை அறிவித்துள்ளார்கள். எனவே அனைவரும் இத்திட்டங்களை அறிந்து பயன்படுத்தி பயன்பெற வேண்டும், பொதுமக்கள் இந்த அரசுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-
முன்மாதிரி கிராமத் திட்டத்தின் மூலமாக கிராமங்களில் சாலை வசதிகள், குடிநீர் வசதி பொதுக்கிணறு, பால்பண்ணை, நல்ல பள்ளிக்கூடங்கள், விவசாயிகள் மேலாண்மை, நல்ல கல்வி பெண் குழந்தைகளுடைய வளர்ச்சி போன்ற அனைத்து துறைகளிலும் பொதுமக்களுடைய வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதுதான் முன்மாதிரி கிராமத் திட்டத்தின் நோக்கம், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று முன்னுரிமை கொடுத்து திட்டங்களை தீட்டி அதன் அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஓ.ஏ.பி,பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு, வங்கி கடன் உதவிகள் போன்ற தேவைகளை அறிந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடைக்கோடி மக்களுக்கும் நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்று நாள்தோறும் திட்டங்களை தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நமது மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக சிறப்பு குறைதீர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிகமான வங்கி கடன் உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், காலை உணவு திட்டம், இன்னுயிர் காப்போம் 48 மணி நேரம் மூலமாக சாலை விபத்து நேரிட்டால் எந்த ஒரு மருத்துவமனை ஆக இருந்தாலும் ரூபாய் ஒரு லட்சம் வரை சிகிச்சைக்காக அளிக்கப்படுகிறது, விபத்துக்குள்ளான நபரை மருத்துவமனையில் சேர்க்கின்ற நபருக்கும் வெகுமானம் அளிக்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் தொழில் முனைவோர்களை ஈர்த்து பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகவே அனைவரும் அனைத்து திட்டங்களையும் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும், உங்களுடைய குறைகள் எதுவாக இருப்பினும் மாவட்ட ஆட்சித் தலைவர் இடமோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரிடமோ சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும் தெரிவிப்பதன் மூலமாக குறைகளை நிவர்த்தி செய்ய முடியும்.
தற்போது பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் 30 நாட்களுக்குள்ளாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திட்டங்களை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
பின்னர் 11 நபர்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் இடுப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் திரு.செல்வராசு, வேளாண்மை இணை இயக்குனர் திருமதி.பாலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.ராமச்சந்திரன், திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி.விஜயா அருணாச்சலம், ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி.பூங்காவனம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.தினகரன்,திரு.சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.தேன்மொழி வெங்கடேசன், உதவி இயக்குனர் வேளாண்மை திருமதி.ராகினி, ம.து.வ.வ.அலுவலர் திரு.சசிகுமார்இ உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,திருப்பத்தூர் மாவட்டம்.