டாஸ்மாக் அருகே விபச்சாரம் நடக்குதுங்க!

டாஸ்மாக் அருகே விபச்சாரம் நடக்குதுங்க!

தி.விநோத்,

 அரசு பதுபானக்கடை மற்றும் அதற்கான பார் அமைந்துள்ள ஏரியாவில் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக மக்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

 திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை தாலுக்கா, விளக்கணாம் பூடி புதூர், வி.ஜி.பி திருமணம் மாளிகை எதிரில் டாஸ்மார்க் கடையும், பக்கத்திலேயே பார் வசதியும் உள்ளது.

 இந்த சரக்கு கடை முக்கிய சாலையில் உள்ளதால் போதை ஆசாமிகள், வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடைஞ்சல் ஏற்படுத்துகிறார்கள்.

 இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் தெரிவிக்கையில், சார் கவர்ன்மென்ட் சாராயக்கடைக்கு வந்து போகும் குடிகாரன்கள் பக்கத்திலுள்ள நிலத்தை அசுத்தம் செய்கிறார்கள். அங்கேயே சிறுநீர் கழிக்கிறார்கள், மது பாட்டில்களை வீசிவிட்டு செல்கிறார்கள்.

   நீர் நிலைகளில் பிளாஸ்ட்டிக் பைகளை கொட்டிவிட்டு போய்விடுகின்றனர்.

 இன்னும் சொல்லப்போனால் இந்த பகுதியை விபச்சாரத்துக்காக கூட குடிகாரன்கள் பயன்படுத்துகிறார்கள். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சொன்னால் கூட அவர்கள் கண்டு கொள்வதேயில்லை. அவர்கள் செவிடன் காதில் ஊதுன சங்கு கணக்காய் கிடக்கிறார்கள்.

 ஆகவே டாஸ்மாக்கின் மாவட்ட மேலாளரும், சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தாரும் இதை கொஞ்சம் காதில் போட்டுக்கொண்டு நடவடிக்கை எடுத்து எங்க ஊர் மானத்தை காப்பாத்தனும் சாமி என்றார்.