இலங்கை தமிழர் மறு வாழ்வு மைய ஏழைகளையும் ஏமாற்றிய அதிகாரிகள்!

கு.அசோக்,
பாணாவரம் இலங்கை தமிழர் மக்கள் புதியதாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு கட்டித்தரக்கோரி உண்ணாவிரதம்.
இராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் புதிய நிரந்தர வீடு கட்டி தர வேண்டும் என கூறி 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சோளிங்கர் வட்டாட்சியர் ராஜலட்சுமி உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
மேற்படி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 102 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அரசு சார்பில் நிரந்தர வீடு கட்டித் தருவதாக கூறி, அங்கு வசித்துவரும் குடியிருப்புகளை காலி செய்து தெரிவித்தை நம்பி 50க்கும் மேற்பட்டோர் கடந்த 10 நாட்களுக்கு முன் வீட்டு மேற் கூரைகளை அகற்றியும் கட்டிட சுவர் இடித்துள்ளனர்.
ஆனால் தற்போது வரை வீடு கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகள் கேட்டபோது வீடு கட்டுவதற்கான நிதி திரும்ப அரசுக்கு சென்று விட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதிகாரி பேச்சை நம்பி குழந்தைகள் மாணவர்கள் கர்ப்பிணி பெண்கள் வீடு இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர்.ஆத்திரம் அடைந்த பெதுமக்கள் புதிய நிரந்தர வீடு கட்டுமான பணிகள் வேலை ஆரம்பிக்க வேண்டும் என உண்ணாவிரதம் போராட்டம் ஈடுபட்டனர்.
வீடு கட்டிட வேலை ஆரம்பிக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் என்றாலே ஏழைகளுக்கு உதவ முன்வராதவர்கள் என்று தான் அர்த்தம் போலிருக்கிறது.