மக்களை தேடி அதிகாரிகள்! வேலூர் ஆட்சியர் பேச்சு!

மக்களை தேடி அதிகாரிகள்! வேலூர் ஆட்சியர் பேச்சு!

ஜி.கே.சேகரன்,

காட்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் பல்வேறு துறைகள் மூலம் சிறப்பு முகாம்கள் மக்களின் குறைகளை போக்கிடவே அதிகாரிகளை தேடி மக்கள் செல்வதை மாற்றி மக்களை தேடி அதிகாரிகள் வருகின்றனர் மக்கள் இதனை பயன்படுத்திகொள்ள வேண்டும் - மக்களுடன் முதல்வர் திட்ட துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு.

 வேலூர்மாவட்டம், காட்பாடியில் உள்ள செங்குட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் துவங்கி வைத்தா£.¢ அதனை தொடர்ந்து காட்பாடி செங்குட்டையில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் மண்டல குழுதலைவர் புஷ்பலதா மாமன்ற உறுப்பினர் அன்பு உள்ளிட்டோரும் திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்.

   இந்த மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் மக்களுக்கு தேவையான சாதி சான்றிதழ் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் ,புதிய குடும்ப அட்டைகள் ஆதார் பெயர் மாற்றம் திருத்தம்,உள்ளிட்ட பல்வேறு மக்கள் குறைகளை  போக்க பல்துறை அதிகாரிகள் முகாமிட்டு மக்களிடம் மனுக்களையும் விண்ணப்பங்களையும் பெற்று அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர்

  இவ்விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் மக்கள் திங்கட் கிழமைகளில் மக்கள் குறைதீர்வு கூட்டங்களுக்கு வந்து தங்களின் குறைகள் குறித்து மனுக்கள் அளித்து தேவைகள் பூர்த்தி செய்யப்படும் ஆனால் இப்போது அதிகாரிகளை தேடி மக்கள் செல்லாமல் மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் மக்களை தேடி அதிகாரிகள் இங்கேயே வந்து அவர்களின் குறைகளை போக்குகின்றனர்.

  மக்கள் விண்ணப்பிக்கும் சான்றுகள் 14 நாட்களிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் அவர்களுக்கு கிடைக்கும் இந்த திட்டம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது மக்கள் இதனை பயன்படுத்திகொள்ள வேண்டுமென பேசினார்.