டெங்கு காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை! தைரியம் சொன்னார் இராணிப்பேட்டை கலெக்டர்!

டெங்கு காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை! தைரியம் சொன்னார் இராணிப்பேட்டை கலெக்டர்!

 கு.அசோக்,

  டெங்கு காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று இராணிப்பேட்டை கலெக்டர் ஆய்வின் போது சொன்னார்.

 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தவிர்த்து வேறு எவரும் மருந்து மாத்திரைகளை வழங்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துச்சென்றார்.

 இராணிப்பேட்டை மாவட்டம்,  ஆற்காடு அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.

  இந்த ஆய்வின்போது பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் உள்நோயாளிகள் அறை, பிரசவ அறை போன்ற பகுதிகளை பார்வையிட்டார். மேலும் மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவது கழிவறைகள் போன்றவற்றின் சுகாதாரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார்.

  மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அவர்களுக்கு கொடுத்திருக்கும் நேரத்திற்கு பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்திணார்.

  அதன் தொடர்ச்சியாக அனைத்து இடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு 

மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் அனைத்து திங்கட்கிழமையும் அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் செய்து டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என ஆய்வின் போது சொன்னார்.