இப்போ போகிறோம்... திரும்பவம் வருவோம்! பால் கூட்டுறவு பணியாளர்கள் திடீர் போராட்டம்!

இப்போ போகிறோம்... திரும்பவம் வருவோம்! பால் கூட்டுறவு பணியாளர்கள் திடீர் போராட்டம்!

கு.அசோக்,

  சோளிங்கரில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பணியாளர்ளுக்கு சம்பள பாக்கி நிலுவை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென பால் கேன்களை சாலையில் வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் பணி செய்து வரும் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பள நிலுவை வைத்ததாக கூறப்படுகிறது.     5 மாதத்திற்க்கு முன்பாக ஊதிய உயர்வு  அறிவித்தும் வழங்காததையும்இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததை குறித்து பால்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

  இந்நிலையில் மே ஒன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு  காலை பணிக்கு வந்த பணியாளர்கள் பணிகளை முடித்துவிட்டு காலி பால் கேன்களுடன் சோளிங்கர் சித்தூர் சாலையில்  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

   தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோளிங்கர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

  இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இன்று மாலைக்குள் உரிய தகவல் கிடைக்காத பட்சத்தில் பணிகளை புறக்கணிப்பு செய்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக தொழிலாளர்கள் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது