சர்வதேச அளவில் இரண்டாம் இடம் பிடித்த கிருஷ்ணன் குரு சிலம்பாட்ட குழு மாணாக்கள்!

சர்வதேச அளவில் இரண்டாம் இடம் பிடித்த கிருஷ்ணன் குரு சிலம்பாட்ட குழு மாணாக்கள்!

 கு.அசோக்,

 வேலூரில் இருந்து கோவா வரை சென்று சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றி வாகை சூடிய அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள்மேளதாளம் முழங்க மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 சர்வதேச இளைஞர் விளையாட்டு மற்றும் கல்வி கூட்டமைப்பு இந்தியா என்ற அமைப்பின் சார்பில் கோவா மாநிலம் மார்கோ மனோகர் பாரிக்கர் ஸ்டேடியத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சிலம்பம் போட்டி நடைபெற்றது.

 இந்தப் போட்டியில், இந்தியா, சிங்கப்பூர், நேபால், தாய்லாந்து, ஸ்ரீலங்கா, மலேசியா, உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வேலூர் மாவட்டம், வேலூர் சாஸ்திரி நகரில் உள்ள கிருஷ்ணன் குரு சிலம்பாட்டம் குழுவின் 53 அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 அவர்கள் ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், வேல்கம்பு, சுருள்வால், குத்துவரிசை, மான்கொம்பு உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு 45 தங்கம், 8 வெண்கலமும் வென்றனர்.

 அந்த வகையில் சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.

இவர்களின் வெற்றியை போற்றும் விதமாக காட்பாடி ரயில் நிலையத்தில் கிருஷ்ணன் குரு சிலம்பம் பயிற்சி பள்ளியை சேர்ந்த ஆசான்கள், பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் மேளதாளம் முழங்க மாலை அணிவித்து  உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 அப்போது அங்கு வந்த ஆசான் தெரிவிக்கையில், அழிந்து வரும் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பக் கலையை தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி ஊக்குவிக்க வேண்டும் என்றனர்.