தினம் 2 லட்சங்களை அள்ளும் காட்டன் சூதாட்ட முதலாளி!

தினம் 2 லட்சங்களை அள்ளும் காட்டன் சூதாட்ட முதலாளி!

அ.கோகுல்,

 அதிகாலை முதல் மாலைவரை மூட்டை தூக்கி உழைக்கும் தொழிலாளிகள் நாளுன்றுக்கு சுமார் 500 ரூபாயை சம்பாதிக்கின்றனர். ஆனால் காட்டன் சூதாட்டம் நடத்தும் முதலாளி தினமும் 2 லட்சங்களை அள்ளி குவித்துவருகிறார். இதற்கு அந்தந்த பி.எஸ், லிமிட்டில் உள்ள அதிகாரிகள் அவர்களுக்கு பக்கபலமாக உள்ளார்கள்.

 அந்த வகையில், வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள குருராஜபாளையத்தில் காட்டன் சூதாட்டம் நடத்தப்படுகிறது.

 அதற்காக அவர்கள் கார் பார்க்கிங்கை முகாம் அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

 இந்த சூதாட்ட விடுதியின் முதாலாளியின் பெயர் ஆனந்தன்.

 இவர் ரவுடிகளுக்கும், ஒரு சில போலீசாருக்கு மாமுல் கொடுத்துவிட்டு தொழில் செய்வதாக அவரே சொல்லிவருகிறார்.

 விவசாய கூலி தொழிலாளர்களின் பணத்தை உறிஞ்சம் இந்த ஆனந்தன் மீது உரிய நடவடிக்கை எடுத்து காட்டன் சூதாட்ட பிசினஸை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என பலரும் கோருகின்றனர்.