இந்தியா பாகிஸ்தான் போட்டி! இப்பவே கண்ணைகட்டும் அகமதாபாத்!

டி.முகமது இர்பான்,
50 ஓவர்களைக் கொண்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. அந்த வகையில் அக்டோபர் மாதம் 5-ந்தேதி போட்டிகள் தொடங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெறும்.
இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15-ந்தேதி நடைபெறுகிறது. மேற்படி மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.
ஆகவே ரசிகர்கள் அக்டோபர் 15-ந் தேதி அகமதாபாத்தில் திரளுவார்கள் என்பதால் அங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள் ரூம் வாடகைகளை அதிகமாக உயர்த்தியுள்ளன. 5 ஆயிரம் ரூபாய் வாடகை கொண்ட ரூம் வாடகை, அக்டோபர் 15-ந்தேதியன்று 10 மடங்கு அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ரூம்கள் புக் செய்யும் இணையதளம் மூலம் இந்த உயர்வு தெரியவந்துள்ளது. அப்படி விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, தற்போது அந்த வாடகை 40 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதற்கெல்லாம் கவலைப்படாமல் ரூம்களை புக் செய்துள்ளனர்.
அகமதாபாத் நகரில் உள்ள ஐடிசி ஓட்டல்களின் வெல்கம் ஓட்டலில் ஜூலை 2-ந்தேதி ரூம் வாடகை 5,699 ரூபாய். அதுவே அக்டோபர் 15-ந்தேதி 71,999 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜி. ஹைவேயில் உள்ள ரெனாய்ஸ்சான்ஸ் அகமதாபாத் ஓட்டலில் தற்போது 8 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதுவே அக்டோபர் 15-ந்தேதி 90,679 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரைடு பிளாசா ஓட்டல், ரூம் வாடகையை 36,180 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
பட்ஜெட் விலையான 3 ஆயிரம் ரூபாயாக இருந்த வாடகை 27,233 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.