கஞ்சா விற்பனை முற்றிலும் இல்லாமல் செய்வேன்!  சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கபடும்!  எஸ்.பி.ஸ்ரேயா குப்தா பேட்டி!

ஜி.கே.சேகரன்,

 சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் துறையினர் பற்றி எனக்கு தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா பேட்டி.

திருப்பத்தூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.  மாவட்டம் பிரிக்கப்பட்டதிலிருந்து இவரை நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்று பணியாற்றினர்.

  இவர் ஐந்தாவது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆவார்.

இந்நிலையில் அவர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் தெரிவிக்கையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையாக சட்டம் பாயும் குற்றச்சம்பவங்களை படிப்படியாக குறைப்பேன்.

 மேலும் முக்கிய பிரதான சாலைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை அமைக்க வழிவகை செய்யப்படும்  பொதுமக்களுக்கு என்னிடம் தொடர்பு கொள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் என்னுடைய செல் போன் எண் எழுதிவைத்திருக்கப்படும்.ஸ்

 போக்குவரத்து நெரிச்சலை கட்டுப்படுத்த வழி வகையை செய்து தரப்படும், பெண்களுக்கெதிரான குற்றங்கள் நிகழாமல் இருக்க முழு நடவடிக்கை எடுக்கப்படும்.

  சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் துறையினர் பற்றி எனக்கு தெரிவித்தால் உடனடியாக சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

  கஞ்சா விற்பனை முற்றிலும் இல்லாமல் செய்வேன். இல்லீகல் மது விற்பனை தடைசெய்யப்படும். சென்ஷேனல் பகுதிகளுக்கு நானே நேரில் சென்று ஆய்வு செய்து அங்கெல்லாம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சொன்னார்.