ஆட்சியர் முன்னிலையில் தபால் வாக்கு செலுத்திய 85 வயது மூதாட்டி மகிழ்ச்சி!

கு.அசோக்,
ஆற்காடு அருகே 85 வயது மூதாட்டி தனது ஜனநாயக கடமையான தபால் வாக்கை செலுத்தி எங்களை போன்ற வயதான முதியவர்களுக்கு இது பயனுள்ளதாக சிரித்த முகத்துடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்குப்பதிவு தினத்தன்று வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் அவர்களது வீட்டிற்கு நேரடியாக சென்று தபால் வாக்குகள் பெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ,ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களிடம் வாக்கு சேகரிக்க, மாவட்ட முழுவதும் தாலுக்கா வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வளர்மதி வேப்பூர் பகுதியில் வசிக்கும் ஜக்குபாய் என்ற 85 வயது மூதாட்டியின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவரை சந்தித்து தபால் வாக்கு எப்படி செலுத்துவது குறித்து எடுத்துரைத்தார் .
பிறகு மூதாட்டி அருகே உள்ள வாக்கு செலுத்தும் அட்டைப்பெட்டியில் தனது வாக்கை செலுத்திய பின்னர் தபால் வாக்கு முறை எங்களைப் போன்ற முதியவர்களுக்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது, நீங்கள் வந்ததற்கு ரொம்ப நன்றி.. நன்றி.. சந்தோசம் என சிரித்த முகத்துடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து அதே பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளான பாலாஜி, பிரேமா, ஆகியோரை தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி சந்தித்து அவர்களது வாக்கினை தபால் வாக்குமூலமாக
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் வாலாஜா வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர்.