கைவிலங்குடன் போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கைதி பிடிபட்டார்! கூட்டாளிகளும் கைது!

ஜி.கே.சேகரன்,
கடந்த சில நாட்களுக்கு முன் காட்பாடி காவல் நிலையத்திலிருந்து கை விலங்குடன் தப்பிச்சென்று மலைப்பகுதியில் பதுங்கி இருந்த விசாரணை கைதி பிடிபட்டார். அவர் உட்பட நான்கு பேரை வேலூர் தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.அவர்களிடமிருந்து மூன்று கிலோ கஞ்சா மற்றும் 2000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம்,காட்பாடி அடுத்த தாராபடவேடு குளக்கரை பகுதியைச் சேர்ந்த கமலேஷ் (19) கஞ்சா வைத்திருந்ததாக கடந்த 22 ஆம் தேதி காலை காட்பாடி காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கமலேஷ் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கும் நிலையில் கஞ்சா வழக்கில் காட்பாடி காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது அவரது கைகள் விலங்கால் பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காட்பாடி காவல் நிலைய போலிசார் அசால்டாக இருந்த சூழலை பயன்படுத்தி கமலேஷ் கை விலங்குடன் காவல் நிலையத்திலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.
எனவே கமலேஷை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டதில் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காட்பாடி அடுத்த கசம் மலையில் பதுங்கி இருந்த கமலேஷ் மற்றும் அவருடன் இருந்த மாதவன் (19)அருண்( 21)தினேஷ் (19)ஆகிய மொத்தம் நான்கு நபர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த 3 கிலோ கஞ்சா மற்றும் 2000 ரூபாய் பணம் ஆகியவற்றை கைப்பற்றி நான்கு நபர்களையும் தனிப்படை போலீசார் காட்பாடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அப்படியென்றால் கை விலங்கு என்ன ஆனது என்று போலிசாரிடம் கேட்டபொழுது, கமலேஷ் தன் கையில் பூட்டப்பட்டிருந்த கைவிலங்கை கழற்றி அவரது பாக்கெட்டில் வைத்திருந்தாராம் அதையும் போலிசார் பறிமுதல் செய்துவிட்டனராம்.
ஆனால் கை விலங்கை எப்படி திறந்தார் என்று பலரும் விணா எழுப்புகிறார்கள். அதே போல் கை விலங்கை கமலேஷ் எங்கேயோ வீசிவிட்டாராம். அதை போலிஸ் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
நல்லகதை.