சீட்டு நடத்தி மோசடி!

 சீட்டு நடத்தி மோசடி!

 கு.அசோக்,

 சோளிங்கரில் சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி பாதிக்கப்பட்ட மக்கள் சோளிங்கர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

 இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்க,ர் அம்மன் குளக்கரை தெருவை சேர்ந்த பூபாலன் (வயது 31) இவர் குலுக்கல் சீட்டு நடத்தி வருகிறார்.

   இந்த குலுக்கல் சீட்டில் ஒரு தவணையில் 50 ஆயிரம் பணம் செலுத்தினால் 10 ஆவது மாதத்தில் இரட்டிப்பாக 1 லட்சம் பணம் தருவதாகவும், மேலும் 10 மாதத்திற்குள் குலுக்கலில் வரும் நபருக்கு 1 லட்சம் பணம் தருவதாக உறுதியளித்துள்ளார்.

  இதனை நம்பி சோளிங்கர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த குலுக்கல் சீட்டில் 50 ஆயிரம் செலுத்தி சேர்ந்தனர்.

 இந்த நிலையில்  பூபாலன் பல மாதங்கள் ஆகியும் கட்டிய பணமும் தரவில்லை. இதுபேன்று பலரிடம் பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

 இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பூபாலனை பணத்தை திருப்பி தர கேட்டுள்ளதாக தெரிகிறது பூபாலன் பணம் எண்ணிடம் இல்லை கூறி காசோலைகள் வழங்கியுள்ளார்.

பதை வங்கியில் செலுத்தியும் பணம் இல்லை என தெரிந்த உடன் பாதிக்கப்பட்டவர்கள் சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 அந்த வகையில், காவல் ஆய்வாளர் முருகானந்தம் அவர்களிடம் பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என 30 க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்துள்ளார்கள். விசாரித்த போது பல லட்சம் ரூபாய் மேசபடி செய்துள்ளதால் இது மாவட்ட பொருள்ளாதார குற்றப்பிரிவு பிரிவுக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்தனர்.