மணம் கசந்த காதல்! உயிரை மாய்த்துக் கொண்ட பேராசிரியை!

ஆர்.ஆர்.ஆர்.,
காதல் விவகாரத்தில் சிக்கி மனம் கசந்த பேராசிரியை, அவரது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.
நெல்லை மாவட்டம் பணகுடி மேரிபாத்திமா தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியம். இவருடைய மகள் மரிய கென்ஸ்லின்
முதுநிலை பட்டதாரியான இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தற்காலிக பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.
மரிய கென்ஸ்லின் அஞ்சுகிராமத்தில் உள்ள தனது உறவுக்கார வாலிபரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு அந்த வாலிபரின் குடும்பத்தினர் உறவுமுறையை காரணம் காட்டி மறுத்துவிட்டனராம்
இதனால் மனம் கசந்த மரிய கென்ஸ்லின் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல இருந்துள்ளார்.
அப்படியிருக்க நேற்று முன்தினம் மரிய கென்ஸ்லின் வீட்டிலுள்ள தனது அறையில் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதுகுறித்து உடனடியாக பணகுடி போலீசுக்கு தம்பி சூசை கென்சன் புகார் செய்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மரிய கென்ஸ்வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.