நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காதலித்த எமிலி!

ம.பா.கெஜராஜ்,
நேதாஜி சுபாஷ் சந்திர போஸிக்கு இன்று 125 ஆவது பிறந்த நாள்!
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் காதல் சமாச்சாரம் பலரும் அறியாதது.
இந்திய விடுதலை போராட்ட வீராரான அவர் இராணுவ படை உருவாக்கி புரட்சி செய்தவர். இவரை பற்றிய பல விஷயங்கள் இன்றளவும் இரகசியமாகவும், மறைக்கப்பட்ட உண்மைகளாகவும் தான் இருக்கின்றன. நேதாஜியின் மரணம் மட்டுமல்ல, அவரது திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்தும் பலரும் அறிந்ததில்லை.
1933ல் ஒரு காயம் காரணமாக, அறுவை சிகிச்சை செய்த பிறகு ஆஸ்திரியாவில் தங்கியிருந்தார் நேதாஜி. அப்போது இந்திய விடுதலையை மையப்படுத்தி "தி இந்தியன் ஸ்ட்ரகில்" என்கிற புத்தகமெழுத முடிவெடுத்தார்.
அதற்கு உதவி புரிய உதவியாளார் வேண்டும் என்று நினைத்து, அதற்கான நேர்முக தேர்வை நடத்தினார்.
அதற்காக இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவரை நிராகரித்த நேதாஜி அவர்கள், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்த பெண்ணை தேர்வு செய்தார். அவரது பெயர் எமிலி.
அப்போதுதான் தனது காதல் துணையை கண்டார் நேதாஜி.
நேதாஜி அவரது காதல் துணை எமிலியை இருவருக்கும் பொதுவான நண்பராக திகழந்த மருத்துவர் மதூர் என்பவர் மூலமாக தான் சந்தித்தார்.
இவர் வியன்னாவில் வாழ்ந்து வந்த இந்திய மருத்துவர் ஆவார். எமிலியின் ஆங்கிலம் மற்றும் டைபிங் திறன் சிறப்பாக இருந்தது.
எனவே, தனது தி இந்தியன் ஸ்ட்ரகில் எனும் புத்தகத்தை எழுத எமிலியை வேலைக்கு அமர்த்தினார்.
எமிலி வியன்னாவில் வாழ்ந்து வந்த ஆஸ்திரியா கத்தோலிக் குடுமபத்தை சேர்ந்தவர். நட்பாக துவங்கி, காதலாக மலர்ந்து 1937-ல் எமிலி மற்றும் நேதாஜி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு முன்பு வரை எமிலி இந்தியா வந்ததே இல்லை. திருமணம் முடிந்து நேதாஜி இந்தியா திரும்பினார்.
1941-1943 ஜெர்மனியில் எமிலி, நேதாஜி வாழ்ந்து வந்ததாக புரளி செய்திகள் மூலம் அறியப்படுகிறது. நேதாஜியின் குடும்பத்தாருக்கே இவர் திருமணம் செய்துக் கொண்டதும், அவருக்கு அனிதா எனும் பெண் குழந்தை இருப்பதும் தெரியாது.
ஒருமுறை எமிலி நேதாஜியின் சகோதரர் சாரத் சந்திர போஸிற்கு கடிதம் எழுதினார். அப்போது தான் அவர்கள் இவரது திருமணம் பற்றி அறிந்ததாக அறியப்படுகிறது.
அதே நேரத்தில், நேதாஜியின் திருமணம் 1942ல் தான் நடந்தது, 1937ல் இல்லை என்றும் கூறப்படுகிறது. சீனாவிற்கு விசா விண்ணப்பித்த போது நேதாஜி சிங்கிள் என்ற தகவல் தான் இருந்துள்ளது என்பதை சான்றாக கூறப்பட்டுள்ளது.
தனது குடும்பத்தை காக்க, தனது திருமணத்தை பற்றி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் உண்மையை மறைத்துவிட்டார். இது அவர் கையாண்ட யுக்தி என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில், சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜிக்கு பல முனைகளில் இருந்து எதிர்ப்புகள் வந்துக் கொண்டிருந்தன. அவரது உயிருக்கும் அபாயம் இருந்தது. இந்திய அரசு! இந்திய விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்த நேதாஜியின் வாழ்க்கை முழுவதும் புரளி, மர்மங்கள் நிறைந்த இரகசியமாகவே நீடித்து வருகிறது.
ஆட்சியாளார்கள் அமைதிகாக்க, மேற்கு வங்கம் மட்டுமே அவர் மீது அக்கறை கொண்டு கடந்த 2015 ஆண்டு சில உண்மைகளை வெளிட்டது நினைவு கூறத்தக்கதாகும்.