இளம் பெண்கள் அப்பா அப்பா என்று கதறுவது முதல்வருக்கு தெரியாதா? 2026 -ல் அதிமுக வலுவான கூட்டணி அமைக்கும் எடப்பாடி பழனிச்சாமி வேலூரில் பேச்சு!

இளம் பெண்கள் அப்பா அப்பா என்று கதறுவது முதல்வருக்கு தெரியாதா? 2026 -ல் அதிமுக வலுவான கூட்டணி அமைக்கும் எடப்பாடி பழனிச்சாமி வேலூரில் பேச்சு!

ஜி கே சேகரன்,

மத்திய அரசு நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு தமிழக ஏழை மக்களை பார்த்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆளுகின்றவர்களை பார்க்க  வேண்டாம் -  திமுக தான் இரட்டை வேடம் போடுகிறது நாங்கள் அல்ல - தமிழகத்தில் நாள் தோறும் பாலியல்  வன் கொடுமைகள் பெண்கள் அப்பா அப்பா என கதறுவது முதல்வருக்கு கேட்கவில்லையா - 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் - அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் பேச்சு .,


     வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டை மைதானத்தில் இலக்கு 2026 என்ற தலைப்பில் அதிமுகவின் இளைஞர் இளம் பெண்கள் பாசறையின் மண்டல மாநாடு பாசறை செயலாளர் பரமசிவம் தலைமையில் நடந்தது.

இதில் சட்டமன்ற எதிர்க்கட்சிதலைவரும் அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, சேவூர் ராமச்சந்திரன்,அக்ரி கிருஷ்ணமூர்த்தி,முக்கூர் சுப்பிரமணி,தம்பிதுரை மற்றும் மாவட்ட செயலாளர் வேலழகன் அப்பு,ரவி,சுகுமார்,உள்ளிட்ட ஆயிரகணக்கான அதிமுகவினர்  பங்கேற்றனர்.

இதில் வேலூர்,திருவண்ணாமலை,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அதிமுக பாசறை நிர்வாகிகள் கலந்துகொண்டனர் .

இம்மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் நாங்கள் பாஜகவின் குரலை அதிமுக ஒலிப்பதாக பேசுகிறார் நாங்கள் யாரையும் கூட்டணி சார்ந்தில்லை எங்களை நாடி தான் எல்லோரும் வருவார்கள்.

நாங்கள் தேர்தல் சமயத்தில் வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி அமைக்கிறோம். அதிமுக மக்களை நம்பியுள்ள கட்சி .

திமுக கூட்டணியை நம்பியுள்ள கட்சி. கூட்டணி கொள்கை வேறு திமுக அங்கம் வகித்துள்ள இந்தியா கூட்டணி ஒற்றுமையில்லை, சிதறி வருகிறது.

இந்தியா கூட்டணியில் ஸ்டாலின் அங்கம் வகித்துகொண்டே கலைஞர் நாணயம் வெளியிட பாஜக மத்திய அமைச்சரை அழைக்கிறார் இது தான் திமுகவின் இரட்டை வேடம்.

எதிர்க்கட்சியாக இருந்த போது கருப்பு பலூன் பறக்கவிட்டு கோபேக் மோடி என சொன்னவர், தற்போது ஆளுங்கட்சி ஊழல்களில் சிக்க கூடாது என மத்திய அரசை வரவேற்கிறார்.

மத்திய அரசு தமிழகத்திற்கு நிதிகளை ஒதுக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார், மக்களாகிய நீங்கள் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுகவை சேர்ந்தவர்களை வெற்றி பெற வைத்தீர்கள் ஆனால் அவர்கள் நிதியை பெற நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

அங்கு கேட்காமல் முதல்வர் தொடர்ந்து நிதியை மத்திய அரசு தரவில்லை என கூறுகிறார்.

மத்திய அரசு இங்கு ஆளுங்கட்சியை பார்க்க வேண்டாம் ஏழை மக்களை பார்த்து நூறு நாள் வேலைவாய்ப்புக்கான நிதியினை உடனடியாக வழங்க வேண்டும்.

முதல்வர் சொல்கிறார் அனைவரும் என்னை அப்பா என அழைக்கிறார்கள் என்று ஆனால் தமிழகத்தில் தான் அதிக அளவில் இளம் சிறார்கள் பாலியல் வன் கொடுமைகள் நடக்கிறது அப்போது இளம் பெண்களும் சிறார்களும் அப்பா அப்பா என கதறுவது முதல்வர் காதில் கேட்கவில்லையா.

நாங்கள் இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் அதிமுக 2026  சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம் என பேசினார்.

குறிப்பு.இந்த மாநாட்டு கூட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பத்திரிகையாளர்களிடம் முறை தவறி நடந்து கொண்டதாக செய்தியாளர்கள் வருத்தப்பட்டனர்.