அம்பேத்கர்   சிலைக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் மாலை !

  அம்பேத்கர்   சிலைக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் மாலை !

D.Nelson,

 சட்டமேதை டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்களின் 133 பிறந்தநாளை முன்னிட்டு இன்று (14.04.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் திருவுருவச்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் திரு.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.விஜயராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.