போதை பொருட்களுக்கு எதிராக கலைநிகழ்சிகள்- வேலூர் ஆட்சியர் பேச்சு!

கு.அசோக்,
வேலூர் சங்கமம் கலைநிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றது. மக்கள் ஆர்வமுடன் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர் - சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை எடுத்து கூற கலைஞர்கள் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை கலைஞர்கள் கலைகள் மூலம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டை மைதானத்தில் கலைப்பன்பாட்டுத்துறை சார்பில் வேலூர் சங்கமம் நம்ம ஊர் திருவிழா என்ற நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இதில்ல் 375 கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்த இந்த விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,மேயர் சுஜாதா,மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் நையாண்டி மேளம், கரகம், புரவி, மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பன்முகப்பறை,பம்பை கைசிலம்பாட்டம்,தப்பாட்டம்,கொக்கிலி கட்டை ஆட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடந்தது.
இதனை வேலூர் மக்கள் திரளானோர் கண்டு ரசித்தனர். இதில் பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றுகளும் காசோலைகளும் வழங்கப்பட்டது வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் கலைஞர்கள் இதே போன்று கலைநிகழ்ச்சிகளை நடத்துவது அரசுக்கும் கலைபன்பாட்டுத்துறைக்கும் நன்றி. மேலும் கலைஞர்களாகிய நீங்கள் இதே போன்று நல்ல கருத்துக்களை மக்களுக்கும் சமூகத்திற்கும் சொல்ல வேண்டும். குறிப்பாக போதை பொருட்களுக்கு எதிராக கலைநிகழ்ச்சிகள் மூலம் நீங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பேசினார்.