ஓட்டேரியில் படகு சவாரி! ஆட்சியர் அறிவிப்பு!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப.,அவர்கள், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்களும் விருப்பாட்சிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இன்று(25.11•2021) காலை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட விருப்பாட்சிபுரம் பகுதியில் கங்கை அம்மன் கோயில் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி தூர்வாரி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விட பணிகள் குறித்தும்,
தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளவும் மேலும் அப்பகுதி கழிவுநீர் கால்வாய்கள் சுத்தப்படுத்தவும் அருகில் உள்ள இரத்தின கவுண்டர் தெரு குளத்திலும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தவும்,
சேனாதிபதி தெரு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் உடனடியாக சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ளவும் மற்றும் இப்பகுதி முழுவதும் உள்ள 100 புதியதாக தார்சாலைகள் செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் தற்போது நிலையில் சாலைகள் தரமாக கட்டமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்பகுதியில் உள்ள தானிய கிடங்கு அருகாமையில் அப்பகுதி மக்கள் சுடுகாட்டிற்கு செல்வதற்கு வழி வேண்டும் என நீண்ட கால கோரிக்கையாக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததன்பால் அப்பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்து தொடர்ந்து ஓட்டேரி ஏரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப.,அவர்கள், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்களும் படகு சுற்றுலா தளமாக மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்