காரை இடித்து டெக்னிக்!! நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி கொலை!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
நேற்று மாலை ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இது பற்றின விவரம் வருமாறு,
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, மணப்படை வீடு கிராமத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுருளிராஜன். இவர் நேற்று மாலை தனது காரில் கே.டி.சி. நகரில் இருந்து பாளை நோக்கி வந்து கொண்டிருந்தபோது பாளை-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் வருமானவரி துறை அலுவலகம் கடந்து வந்தார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் கார் மீது தங்களது மோட்டார் சைக்கிளால் இடித்துள்ளனர். உடனே சுருளிராஜன் இடித்தது யார் என பார்க்க காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
இந்த சம்பவம் குறித்து பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஹரிகரன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார். மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நெல்லையில் நடந்த இந்த கொலையில் கூலிப்படையினர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.