கொத்தமல்லி லோடு லாரி விபத்து!

கொத்தமல்லி லோடு லாரி விபத்து!

கு.அசோக்,

 ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினி லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கிய லாரியில் சிக்கிய லாரி ஓட்டுநரை உயிரிழந்த நிலையில் மீட்டனர்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் இருந்து விடியற்காலையில் மினி லாரி மூலம் கொத்தமல்லி லோடு ஏற்றிக்கொண்டு வேலூர் சென்று இறக்கி விட்டு மீண்டும் திரும்பியது.

 அப்போது திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினி லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவர் மற்றும் மின்கம்பத்தின் மீது மோதி தலைகுப்புற  கவிழ்ந்தது.

 விபத்துக்குள்ளானதில் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் லாரி இடிபாடுக்குள் சிக்கிய லாரி ஓட்டுநர் சாதிக் என்பவரை சடலமாக மீட்டனர்.ஸ்

  இந்த பணியில் தேசிய நெடுஞ்சாலை துறை, காவல் துறை  மற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.