ஏமாந்த ரொனால்டோ! உலக கோப்பை கால்பந்து திருவிழா!

ஏமாந்த ரொனால்டோ! உலக கோப்பை கால்பந்து திருவிழா!

ம.பா.கெஜராஜ்,

  உலக கோப்பை கால்பந்து போட்டி திருவிழா தற்போது கத்தார் நாட்டில் நடந்துவருகிறது.

 சற்றே பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்நேரதில் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜெண்டினா போன்ற நாடுகள் களத்தை சூடேற்றி வருகிறது.

 அதைவிட சிறிய அணிகளாக தெரியப்படும் போலாந்து போன்ற நாடுகளின் தாக்கம் எதிர் அணிகளின் நாட்டில் கலவரத்தையே ஏற்படுத்தும் வெற்றிகளை ஈட்டிவருகிறது.

  அந்த வகையில்  உருகுவே அணியை 2-0 கோல் கணக்கில் வீழ்த்தியது போர்ச்சுக்கல் இரண்டாவது சுற்றில் விளையாட போர்ச்சுக்கல் தகுதி பெற்றது. இரண்டாவது பாதியில் புருனோ பெர்னாண்டஸ் 2 கோல்கள் அடித்தார். உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற குரூப் ஹெச் பிரிவு ஆட்டத்தில் பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணி, உருகுவேயை எதிர்கொண்டது.

   முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 2வது பாதியின் 54 வது நிமிடத்தில் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ தலையால் முட்டி உருகுவே வலைக்குள் பந்தை தள்ளினார். ஆனால் மற்றொரு வீரர் புருனோ பெர்னாண்டஸ் மேல் பந்து பட்டுச் சென்றதால் அந்த கோலை நடுவர் பெர்னாண்டசிற்கு வழங்குவதாக அறிவித்தார்.ஜிதனால் ரொனால்டோ ஏமாந்து போனார்.

  பின்னர், போர்ச்சுக்கல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி புருனோ பெர்னாண்டஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்திய போர்ச்சுக்கல், தனது பிரிவில் முதலிடம் பிடித்த  அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

  அதே போல் குரூப் ஜி பிரிவு ஆட்டம் ஒன்றில் வலிமையான பிரேசில் அணியும், சுவிட்சர்லாந்து அணியும் மோதின. கோல் அடிப்பதற்கு இரு அணிகளும் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், முதல் பாதிவரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் சமனில் இருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் எடுத்துக் கொடுத்த பந்தை, மற்றொரு வீரர் கேஸ்மிரோ கோலாக மாற்றினார். இறுதிவரை வேறு கோல் எதுவும் அடிக்கப்படாததால் அந்த கோலே வெற்றி கோலாகவும் அமைந்தது. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரேசில் ஜி பிரிவு புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன், முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

  குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் கானா, தென் கொரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் கானா அணியின் முகமது சாலிசு ஒரு கோலும், 34வது நிமிடத்தில் முகமது குதுஸ் ஒரு கோலும் அடித்தனர். இதனால் முதல் பாதியில் கானா அணி 2- என முன்னிலை பெற்றது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட தென் கொரியா அணியின் சோ கு சங் இரண்டாவது பாதியில் 58 மற்றும் 61-வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கானாவின் முகமது குதுஸ் 68- து நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினர். இறுதியில், கானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 மேலும் 'இ' பிரிவில் நேற்று நள்ளிரவு நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராடா தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். இதற்கு பதிலடியாக 83வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிக்லாஸ் புல்க்ரக் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை.

   இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் டிரா ஆனது. போட்டியின் முடிவில் 'இ' பிரிவில் ஸ்பெயின் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி அடுத்து சுற்றுக்கு முன்னேற ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தால் போதும்.

   ஜப்பானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த ஜெர்மனி, ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

   இந்த போட்டியில் பெல்ஜியத்துடன் மோதிய போலாந்து வெற்றி பெற்ற நிலையில் பெல்ஜியத்தில் கலவரம் வெடித்தது.

 அதை கட்டுப்படுத்த அந்நாட்டு போலொஇசார் படாதபாடுபட்டனர்.