நீர் நிலைகளை அகற்ற கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

 நீர் நிலைகளை அகற்ற கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,

 நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற கூடாது கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எல்லா கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் மனு அளிக்கின்றனர் - நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அனைக்கட்டில் பேட்டி

  வேலூர்மாவட்டம்,அனைக்கட்டு கெங்கநல்லூரில் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 1072 கர்பினி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் சீர்வரிசைகளை மகளிர்களுக்கு தனது சொந்த செலவில் வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது.

  இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு மேயர் சுஜாதா மாவட்ட ஊராட்சித்தலைவர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மகளிர்களை வாழ்த்தினார் இதில் சீர்வரிசை பொருட்களாக புடவை வளையல்,மசைக்கை அரிசி,பழங்கள்,சத்தாண தின்பண்டங்கள் வழங்கப்பட்டது மேலும் இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து கர்பினி தாய்மார்களுக்கும் உணவும் பரிமாறப்பட்டது

  பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சித்தராமைய்யா தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் வருகிறார்.

 அப்போது மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவிடம் பேச வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு அவர் வேறு வேலையாக வருகிறார் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

  மதுரை உயர்நீதிமன்றம் நீர் நிலைகளை சரியாக பராமரிக்கவில்லை என கூறியுள்ளது என கேட்டதற்கு எல்லாவற்றையும் பராமரித்து வருகிறோம், குறிப்பிட்டு சொன்னால் நடவடிக்கை எடுக்கலாம் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை எடுத்து கொண்டு தான் உள்ளோம் பலர் ஊர்களில் மக்கள் ஒன்று திரண்டு வேண்டாம் என சொல்கிறார்கள்.

  மக்களுடைய கோஷத்திற்கும் நாம் தலைவணங்குகிறோம், சட்டமன்ற உறுப்பினர்களே என தொகுதியில் எடுக்காதீர்கள் என்று சொல்வதையும் நான் கவணித்திருக்கிறேன்.நீதிமன்றம் சொல்வது நியாயம் தான் நானே ஒத்துகொள்கிறேன்.

  ஆனால் மக்கள் 10 முதல் 15 ஆண்டுகளாக தங்கியுள்ளோம் என சொல்கிறார்கள் வரி கட்டுகிறோம் என சொல்கிறார்கள். பல எதிர்ப்புகளை நாங்கள் சந்திக்கிறோம் அதையும் நீதிமன்றம் உணர வேண்டும்.

  எதிர்க்கட்சிகளும் அவர் அவர் தொகுதிக்கு வரும் போது வேண்டாம் என்று சொல்கிறார்கள் கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவரே ஆக்கிரமிப்புகளை எடுக்க வேண்டாம் என மனு கொடுத்திருக்கிறார் என்று சொன்னார்.