மீண்டும் கள்ளச்சாராயம்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த இளம் பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 25 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் எஸ்பி தனிபடை காவல்துறையினர் நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திரா எல்லைப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு அதனை பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் எஸ்.பி தனிப்படை எஸ் ஐ ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினர். பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தெக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரின் மனைவி தேன்மொழி (வயது 22) என்பவர் அப்பகுதியில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 25 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரை கைது செய்து அம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவரை சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக கள்ளக்குறிச்சிக்கு பிறகு கள்ளச்சாராயம் சம்பவத்தை தொடர்ந்து தற்பொழுது மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருபவரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.