கட்சி கொடிகளை ஏப்-21 க்குள் அகற்ற கலெக்டர் அறிவுரை!

கு.அசோக்,
வேலூர்மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கொடிகம்பங்களை அகற்றுவது குறித்து அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிக்கொடிகளை பொது இடங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் அரசு அமைப்பு சங்கங்கள் மதம் மற்றும் ஜாதி அமைப்புகள் அறக்கட்டளைகள் ஆகிய கொடி கம்பங்களை அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் அதிமுக திமுக பாஜக ,காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் ஜாதி சங்க அமைப்பு தலைவர்கள் அரசு அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் என பல தரப்பினரும் இதில் கலந்துகொண்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர் இதில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் கொடிகம்பங்கள் 1348 பொது இடங்களில் உள்ளது நமது மாவட்டத்தில் இதே போல் அடிபாகம் இல்லாத கொடி கம்பங்கள் 624 உள்ளது இவைகளை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அந்தந்த அரசியல் அகற்ற வேண்டுமென பேசினார்.