பெரிய குளம் நகராட்சி வழங்கும் பழுப்பு கலர் குடிநீர்!

பெரிய குளம் நகராட்சி வழங்கும் பழுப்பு கலர் குடிநீர்!

எம். ரபிக் ராஜா

 தேனி மாவட்டம், பெரிய குளம் நகராட்சி பகுதிகள் தூய்மையான குடிநீர் கிடைக்க வாய்பில்லாமல் ஆகிவிட்டது.

 ஆகவே  தூய்மையான குடிநீரை வழங்குமா நகராட்சி நிர்வாகம் என மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. படத்தை பாருங்கள் இதுதான் பெரியகுளம் நகராட்சி வழங்கிய அறுபுத குடிநீர்.,

  குறிப்பாக சொல்லவேண்டுமெனில்,  பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீர் மாறுபட்டு கலப்படமாக காணப்படுகிறது.

 தற்போது நிலவி வரும் வைரஸ் காய்ச்சல் மற்றும் பல்வேறு விதமான நோய் தொற்றுகள் இதனால் தான் ஏற்படுகின்றன என்று பொதுமக்கள் புலம்புகின்றனர்.

  ஆகையால் சம்பந்தப்பட்ட துறை துரித நடவடிக்கை எடுத்து பெரியகுளம் பகுதி பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட இயற்கையான குடிநீரை வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.