நீதியரசர் துணையுடன் டாக்டர் பட்டம்- பெண் உட்பட மூவரை பிடித்த சென்னை போலிஸ்!

கு.அசோக்,

 நடிகர் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் தேவா ஆகியோருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியதற்காக தேடப்பட்டு வந்த ஹரிஷ் என்பவன் உட்பட மூவரை சென்னை போலிசார் சூப்பராக மடக்கி பிடித்தனர்.

  சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திரைப்பட நடிகர் வடிவேலு, பார்த்திபன், இசையமைப்பாளர் தேவா உட்பட  திரைத்துறை பிரபலங்கள் சிலருக்கு ஹரிஷ் என்பவர் தலைமையிலான தனியார் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் டாக்டர் பட்டம் வழங்கினர்.

 இது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டு காவல் துறையினர் ஹரிஷை பிடிக்க முயன்றனர். ஆகவே கமிஷனர் அலுவலகத்தில் தனிப்படை அமைக்கப்பட்டது.

 பின்னர் தனிப்படையினர் ஹரிஷின் செல்போன் எந்ததெந்த டவரில் கவர் ஆகிறது என்று ஃபாலோ செய்தார்கள்.

 அப்போது சென்னை பெங்களூரு சாலை மார்கமாக ஹரிஷ் பயணிப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பின் தொடர்ந்தனர். அதில் வேலூரை கடந்து சென்ற ஹரிஷ் ஆம்பூர் அடுத்த வடிவேல் நகர் பகுதியில் ஒரு வீட்டுக்கு காரில் சென்ற போது சென்னை தனிப்படை போலிசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தார்கள்.

   அப்போது ஹரிசுடன் கீர்த்தி என்கிற பெண்ணும், குட்டிராஜா என்பவரும் பிடிபட்டார்கள். அவர்களை சென்னைக்கு தனிப்படை போலிசார் அழைத்துச்சென்றார்கள்.

  இந்த விவரங்கள் எதுவும் உள்ளூர் போலிசாருக்கு தெரிவிக்காமல் ரகசியமாக வைக்கப்பட்டது.

   மேற்படி ஹரிஷ் இது போல பிரபங்களுக்கு பட்டம் அளிப்பதாக கூறி கோடிகணக்கில் பணம் வசூலித்ததாக விசாரணையின் போது தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

 இது போன்ற டுபாக்கூர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு இப்படிப்பட்ட தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார்கள். அதை கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொண்டால் நலம்.