தமிழகத்தில் பாசிச மதவாதம் வெல்ல முடியாதாம்?சொல்கிறார் தயாநிதி எம்.பி.!

தமிழகத்தில் பாசிச மதவாதம் வெல்ல முடியாதாம்?சொல்கிறார் தயாநிதி எம்.பி.!

 கு.அசோக்,

 தமிழகத்தில் பாசிச மதவாதம் வெல்ல முடியாது முத்துகடையில் நடைபெற்ற திமுக பொதுகூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேச்சு

  மறைந்த திமுகவை சேர்ந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா முன்னிட்டு,  இராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

   இந்த கூட்டத்திற்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் திராவிட இயக்க தமிழ் பேரவையின் பொதுச் செயலாளர் வீரபாண்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

    இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தின் போது மறைந்த பேராசிரியர் அன்பழகன் திமுக கட்சியில் ஆற்றி வந்த பணிகள் மற்றும் செயல்பாடுகளை குறித்து எடுத்துக்கூறி கழக உறுப்பினர்கள் அனைவரும் இதனை முன்னுதாரணமாக கொண்டு செயலாற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

  பொதுக்கூட்டத்தில் போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்  இந்தியாவில் தற்போது பாசிச மதவாத வெறுப்பு அரசியல் நடைபெற்று வருவதாகவும் மக்களுக்காக செய்த சாதனைகளை சொல்லி வாக்குகள் பெறவில்லை எனவும் மதவாத பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்திருப்பதாகவும் மத்தியில் ஆரிய கல்வி முறையினை முன்னிறுத்தி செயல்படுத்தி வருவதாக விமர்சித்தார்.

 மேலும் ஆரிய கல்வி முறைக்கு எதிராகவே தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவேன் என சபதம் ஏற்றுள்ளார்.

 மத்திய அரசு 25,000 நபர்கள் பேசுகின்ற சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ரூபாய் 648 கோடி மக்களின் வரிப்பணம் ஒதுக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது என பேசினார்.

   மேலும் எந்த மொழிக்கும் திராவிட முன்னேற்ற கழகம் எதிரி அல்ல ஒரு மொழியை உயர்வாகவும் பிற மொழிகளை தாழ்வாகவும் தெரிவிக்கின்ற கருத்திற்கு எதிரானவர்கள்.  தமிழகத்தில் பாசிசம் வரவும் முடியாது வெல்லவும் முடியாது எனவும் இது பெரியார் கருணாநிதி தற்போது ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் இருக்கக்கூடிய தமிழக மண் என பேசினார்.