வாடகை தாய்களை அடைத்து வைத்து பிசினஸ் செய்யும் சி.எப்.சி. மருத்துவமனை!

ம.பா.கெஜராஜ்,
நயன்தாரா தம்பதிக்கு வாடகைதாய் மூலம் பிள்ளை பெற்றுக் கொண்ட விவகாரம் பல்வேறு பிரச்சனைகளை வெளிகொண்டுவர பயன்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வாடகை தாய்கள் தொடர்பான விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக சென்னை சூளைமேடு பகுதியில் வீடுகளில் சி.எப்.சி. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பில் பெண்களை அடைத்து வைத்து வாடகை தாயாக பயன்படுத்துவதாகவும், அவர்களிடம் இருந்து கருமுட்டை தானமாக பெறுவதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்த போது பரபரப்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அதாவது அவர்கள் குஜராத், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் வங்காளதேசம், நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்தும் அழைத்து வரப்பட்டுள்ளனர். சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்களே பெரும்பாலும் வாடகை தாய்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். அனைவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இதில் பலருக்கு திருமணமே ஆகவில்லை என்று தெரிய வந்தது.
குடும்ப வறுமையை பயன்படுத்தி இந்த செயலில் அவர்களை இந்த தொழிலில் ஈடுபட வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு கொடுக்காமலும் சித்ரவதை செய்துள்ளனர். அவர்கள் பகலில் வெளியில் வர அனுமதிக்கப்படுவதில்லை. இரவு நேரத்தில் மட்டுமே வெளியில் வர முடியும். மேலும் டாக்டர்கள் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரபல தொலைகாட்சியின் பெண் செய்தியாளர் மிகவும் துணிச்சலாக சென்று சூளைமேடு பகுதியில் உள்ள இல்லீகலாக பெண்களை தங்க வைத்துள்ள இடங்களை துள்ளியமாக படம்பிடித்தார். அதுவும் லைவ் டெலிகாஸ்ட் ஆனது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் விஸ்வநாதன், கிருஷ்ணா உள்பட 4 பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டது. சுகாதாரத்துறையில் உள்ள ஊரக வளர்ச்சி பணிகள் திட்ட முகமையை சேர்ந்த இந்த குழுவினர் நேற்று சூளைமேட்டில் உள்ள சி.எப்.சி. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சோதனை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர்.
மேற்படி மருத்துவமனை நிர்வாக தரப்பினரிடம் விளக்கம் கேட்க முயன்று "பிரஸ்" என்றதுமே எகிறி குதித்து பாய்கிறார்கள்.
அது சரி,