இடைத்தேர்தலில் காங்கிரஸை எதிர்க்க பாஜகவே சரி:-சொல்கிறார் வேட்பாளர் இளங்கோவன்!
த.லூக்காஸ்,
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு சீட்டு திமுக கூட்டணி அசத்தியிருக்கிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மூத்த மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்த நிலையில் தான் போட்டியிடப்போவதில்லை, தனக்கு பதிலாக எனது இளைய மகன் இடைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளங்கோவனை அறிவித்ததும் அவர் செய்தியாளார்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது இங்கு காங்கிரஸ் கட்சிக்கு சீட்டு கொடுத்திருப்பதால், எதிரணியில் பாஜக போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என அவரது பாணியில் தாமரையை வம்புக்கு இழுத்துள்ளார்.
இதனால் இடைத்தேர்தல் நடக்கவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பரபரப்பு துவங்கியுள்ளது.