ஆன்லைனில் போதை மாத்திரை! குஜராத்திலிருந்து பார்சல் வருவதாக தகவல்!

ஆன்லைனில் போதை மாத்திரை! குஜராத்திலிருந்து பார்சல் வருவதாக தகவல்!

 டி.இ.முகமது, 

ஆன்லைனில் போதை மாத்திரை வாங்கி சப்ளை செய்துக்கொண்டிருந்த நபர்களை காவல் துறையினரிடம் பிடித்துக்கொடுத்திருக்கிறார் கட்டிட தொழிலாளி. அதன் பேரில்15 பேரை தட்டி தூக்கியிருக்கிறது போலிஸ்.

நாமக்கல்லில் வெப்படை அருகே வலி நிவாரண மாத்திரைகளை போதை ஊசியாக பயன்படுத்திய 15 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் கட்டிடத்தொழிலாளி ஜீவானந்தம். இவர் பள்ளிபாளையம் காவல் நிலையத்துக்கு ஒரு அவசர தகவலை அளித்தார். அதை கேட்டு அதிச்சியான போலிசார் அவரிடம்  புகார் எழுதி பெற்றனர்.

   அவர் அளித்த புகாரில், 'நானும், எனது நண்பர்களும் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வந்தோம். தற்போது, நான் பயன்படுத்துவது இல்லை. எனினும், இந்த மாத்திரைகளை பயன்படுத்துமாறு நண்பர்கள் என்னை கட்டாயப்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

 இந்த புகார் குறித்த தகவல் உடனடியாக எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்னுக்கு தெரிவிக்கப்பட்ட. அவரது  உத்தரவின்பேரில், திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது விசாரிக்கப்பட்டது. 

 அப்போது, ரூ.200 முதல் ரூ.300 என்ற விலையில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி போதைக்காக தண்ணீரில் கரைத்தும், ஊசி மூலம் உடலில் செலுத்தியும் பயன்படுத்தி வந்துள்ளனர் என்று தனிப்படையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 

மேலும், இந்த மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி உள்ளூர் பகுதியில் விற்பனை செய்த பள்ளிபாளையத்தை சேர்ந்த கிரிஹரன் (26), மாதவன் (18), தென்னரசு (18), சுஜித் (26),லட்சுமணன் (22), இலியாஸ் உல்லா, கலியனூர் கவுரி சங்கர் (21),தீபன் (21), நந்தகுமார் (19), பிரவீன் (18), ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த விக்னேஷ் (24), கருங்கல்பாளையம் கவுதம் குமார் (32), சேலம் மாவட்டம் சங்ககிரி சுஜித் (21), ராசிபுரத்தானூர் யுவராஜ் (24), மறவம்பாளையத்தான்காடுகவுதம் (23) ஆகிய 15 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள10 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

 பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், "ஆன்லைனில் இந்த மாத்திரைகள் வாங்கப்பட்டுகிறது. குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கூரியர் மூலம் வருகின்றன சொல்லியிருக்கிறார்கள்.