வெல்டிங் இயந்திரம் மூலம் 4.5 லட்ச ரூபாய் கொள்ளை.

கு.அசோக்,
சிசிடிவி கேமரா மற்றும் காவலாளி இல்லாததால் ஏடிஎம் ,ல் மர்ம நபர்கள் புகுந்து வெல்டிங் இயந்திரம் மூலம் சுமார் 4.5 லட்ச ரூபாய் கொள்ளை. தனிப்படை அமைத்து விசாரிப்பதாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் தகவல்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவிற்கு உட்பட்ட பெருங்களத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் ஜிஆர்டி பொறியல் கல்லூரி வளாகத்தில் ஆக்சிஸ் வங்கி சொந்தமான ஏடிஎம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஏடிஎம் செக்யூர் வேல்யூ என்ற தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது.
கடந்த 15ஆம் தேதி அந்த நிறுவனம் சார்பாக ஏடிஎம்மில் 8.5 லட்சம் ரூபாய் பணம் நிரம்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அந்த ஏடிஎம் மையத்தை வெல்டிங் இயந்திரங்களின் உதவியோடு துண்டு துண்டாக வெட்டி அதில் இருந்து பணம் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏடிஎம் மையத்தில் சிசிடிவி கேமரா காவலாளி உள்ளிட்ட பாதுகாப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் இந்த கொள்ளை நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் ஏடிஎம்மில் இருந்து சுமார் 4.5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என பணம் நிரப்பிய தனியார் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் இந்த ஏடிஎம் கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்த அரக்கோணம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்