குலதெய்வ வழிபாட்டிற்கு வந்த இருவர் பலி! நால்வர் சீரியஸ்!!

ஜி.கே.சேகரன்,
குலதெய்வ வழிபாட்டிற்கு பெங்களூரில் இருந்து காரில் வந்த ஆறு இளைஞர்கள் கார் விபத்தில் சிக்கியதில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் பலி நான்கு பேர் படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த பாணாவரம் வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி, இவர் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.ஜோதி மற்றும் அவரது குடும்பத்தினர் தனது பேரக்குழந்தைகளுக்கு காது குத்துவதற்காக வேடந்தாங்கல் கிராமத்திற்கு குடும்பத்துடன் காரில் வந்துள்ளார்.
அப்போது உடன் வந்த நபர்களுடன் ஆறு இளைஞர்கள் காரை எடுத்துக்கொண்டு வேடந்தாங்கலில் இருந்து பாணாவரம் அருகேயுள்ள வேடந்தாங்கல் நோக்கி காரில் சென்றுள்ளனர்.
அப்பொழுது எதிரே வந்த ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அருண்/24 மற்றும் மற்றொருவர் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மூர்த்தி/22 சதீஷ்/25, சரவணகுமார்(24), ஏழுமலை/25 நான்கு பேர் பலத்த காயங்களுடன் நபர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்குமறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கார் விபத்து குறித்து பாணாவரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குலதெய்வ வழிபாட்டிற்காக பெங்களூரில் இருந்து சொந்த கிராமத்திற்கு வருகை வருகை புரிந்தவர்கள் விபத்துக்குள்ளானதில் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.