ரஜினிக்கு மூளை ரத்த குழாய் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது-மருத்துவமனை அறிவிப்பு!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
ரஜினிகாந்துக்கு மூளை ரத்தகுழாய் சிகிச்சை செய்யப்பட்டது, அவர் குணமடைந்து வருகிறார் என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு பிறகு ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது
நடிகர் ரஜினிகாந்த் அக்டோபர் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கரோடிட் தமனி ரீவாஸ்குலரைசேஷன் செய்யப்பட்டதைத் தொடர்ந்து குணமடைந்து வருவதாக சென்னை காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஆகவே சில நாட்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திரு ரஜினிகாந்த் நேற்று (28 அக்டோபர் 2021) மயக்கம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் மருத்துவர்களின் நிபுணர் குழுவால் முழுமையாக சோதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு கரோடிட் ஆர்டரி ரிவாஸ்குலரைசேஷன் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி இன்று (29 அக்டோபர் 2021) வெற்றிகரமாக மேற்படி சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் நன்றாக குணமடைந்து வருகிறார்.
சில நாட்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்”
கரோடிட் எண்டார்டெரெக்டோமி என்பது மூளைக்கு சாதாரண இரத்த ஓட்டத்தை அளிக்கக்கூடியது ஆகும்.
அறுவை சிகிச்சை நிபுணர் கழுத்தில் ஒரு கீறல் செய்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை திறந்து, கட்டமைப்பு சீர் கேட்டை அகற்றுவார்.
மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வரும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரசிகர்கள் மருத்துவ வளாகத்திற்குள் நுழைய கூடாது என்பதற்காக மருத்துவமனை வாயிலுக்கு வெளியே போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சுமார் 30 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வார தொடக்கத்தில், ரஜினிகாந்த் மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருதை வென்றார். திங்கள்கிழமை நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை நடிகர் தனது வழிகாட்டியான கே பாலச்சந்தர், அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட் மற்றும் அவரது நீண்ட நாள் நண்பரும், பேருந்து ஓட்டுநராக இருந்த முன்னாள் சக ஊழியருமான ராஜ் பகதூர் ஆகியோருக்கு அர்ப்பணித்துள்ளார்.
டிசம்பர் 2020 இல், ரஜினிகாந்த் இரத்த அழுத்தத்தில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அரசியலுக்கு வரப்போவதில்லை என்றார். "இந்த உடல்நல சிக்கலை (மருத்துவமனையில்) நான் கடவுள் எனக்கு கொடுத்த எச்சரிக்கையாக பார்க்கிறேன்," என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஜூலை மாதம், மீண்டும் தனது அரசியல் பிரவேசத்தை நிராகரித்த ரஜினிகாந்த், ரசிகர் மன்றங்களின் அமைப்பான ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைப்பதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.