அமைச்சர் துரைமுருகன் தொகுதியில் லேட் டாக்டர்!

அமைச்சர் துரைமுருகன் தொகுதியில் லேட் டாக்டர்!

  பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

  அமைச்சர் துரைமுருகனின் தொகுதிக்குட்பட்ட பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் லேட்டாக வந்து நோயாளிகளுக்கு டாட்டா காட்டுகிறாராம்.

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுக்கா, பள்ளிகுப்பம் மாநகராட்சி வார்டு 2 அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 9 மணி முதல் 12 மணிவரை  புறநோயளிகள் பார்வை நேரமாக உள்ளது.

 ஆனால் இந்த நேரத்தில் மருத்துவர் இருப்பது இல்லை, அதற்கு பின்னரும் வருவது இல்லை.

  செவிலியர்கள் தான் அங்கு மருத்துவம் பார்த்து நோயாளிகளுக்கு ஊசி போடுவது வழக்கமாக உள்ளது.

  இன்று (12.11.2021) காலை சிகிச்சைக்காக நோயாளி ஒருவர் மருத்துவரை சந்திக்க சென்ற பொது அவர் 11 மணிக்கு மேல் தான் மருத்துவ மனைக்கு வந்தார்.

 மருத்துவ முகாம்கள் பார்வைக்கு சென்று விட்டு நேரம் கடந்து வந்தாக அதற்கு காரணம் சொல்லி சமாளித்திருக்கிறார் அந்த மருத்துவர்.

 அப்படின்னா ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் எங்களை போன்ற நோயாளிகளின் கதி என்னாவது என்று அங்கு வந்த நோயாளிகள் அவரிடம் கேள்வியெழுப்பினர்.

 அதற்கு அவர், அவசரகால பிரசவம், கூட செவிலியர்கள் பார்பக வேண்டும் என்றும், மாலை மற்றும் இரவு நேரத்தில் மருத்துவர்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்து பந்தா காட்டியிருக்கிறார்.

  தன் தொகுதியை தமிழ்நாட்டின் முன்னுதாரணமாக வைத்திருக்கும் அமைச்சர் துரைமுருகனின் ஏரியாவில் இப்படி மருத்துவரா? இதுபற்றி அவரிடம் புகார் தெரிவிக்க உள்ளதாக அத்தொகுதிவாசிகள் கூறுகின்றனர்.

குட் அப்ரோச்...!