நாடக அரங்கு உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ ஆய்வு!

க.பாலகுரு,
திருவாரூர் குடவாசல் பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் ஆய்வு செய்தார்.
குடவாசல் ஒன்றியம், நார்ணமங்கலம் ஊராட்சியில் ரூ.7.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாடக அரங்கினையும், ரூ.27.76 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தினையும், சேதனிபுரம் ஊராட்சியில் ரூ.10.32 இலட்சம் மதிப்பீட்டில் திருவாசல் குளம் தூர்வாரி புனரமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.1.42 இலட்சம் மதிப்பீட்டில் விழிதீர் ரோட்டு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டார்.
மேலும், ரூ.2.11 இலட்சம் மதிப்பீட்டில் மேட்டுத்தெரு கப்பி சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.1.54 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்த்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெறுவதையும், மணவாளநல்லூர் ஊராட்சியில் ரூ.19.37 இலட்சம் மதிப்பீட்டில் சங்கரா பள்ளி கப்பி சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மருதுவாஞ்சேரி ஊராட்சியில் ரூ.2.79 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டடம் சீரமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.0.685 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கபட்டுள்ள பள்ளி கழிவறையினையும், ரூ.0.185 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கபட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி கழிவறையினையும், ரூ.0.280 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கபட்டுள்ள பள்ளியில் பெண்கள் கழிவறையினையும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில், குடவாசல் வட்டாட்சியர்.தேவகி குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர் உடனிருந்தனர்.