ஓசியில் ஊர் குடி வேலை செய்ய சித்ரவதை!

ஓசியில் ஊர் குடி வேலை செய்ய சித்ரவதை!

  பாலாஜி,

  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சலூன் கடை தொழிலாளியின் குடும்பத்தை சாதி அடிப்படையில் சிலர் சித்ரவதை செய்து வருகின்றனர்.

 இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

 அதில், இந்த நவீன காலத்திலும் ஊர் குடி வேலை செய்யவும், ஈம காரியத்திற்கு கட்டாயப்படுத்தியும் இம்சை கொடுக்கிறார்கள். கதவை உடைத்து வீடு புகுந்து அடிக்கிறார்கள்.

  ஆம்பளை, பொம்பளைகள் சேர்ந்து அடிக்கிறார்கள். வயித்து மீது எட்டி உதைத்தார்கள். அதனால தான் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.

  ஊருக்கு ஒத்தை ஆள், ஷேவிங் பண்ணனும், கட்டிங் பண்ணனும். ஈம காரியங்களை செய்யனும். வேலை செய்தாலும் கூடி கொடுப்பதில்லை.

  எங்க வீட்டுகாரருக்கு கண் சரியாக தெரியாது. என் மாமனார், மாமியார் வயசானவங்க. எதுவும் செய்ய முடியலை.

  நாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் இந்த ஊரை விட்டு உங்களை ஒதுக்கி வைத்து விடுவோம் என மிரட்டுகிறார்கள் என அந்த பெண் பரிதாபமாக பேசுகிறார்.

  பெண் என்றும் பாராமல் உடைகளை கிழித்து, மானபங்கப்படுத்தி அடித்துள்ளார்கள்.