இடைத்தேர்தலின் போது சொன்னதை தற்போது நிறைவேற்றினோம்! அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

இடைத்தேர்தலின் போது சொன்னதை தற்போது நிறைவேற்றினோம்! அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

 ஜி.கே.சேகரன்,

 ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் மாதனூர் ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ,வேலு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் மற்றும் மாதனூர் ஒன்றியங்களில் உள்ள வீடுகளில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் வில்வநாதன் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் பங்கேற்று 665 பயனாளிகளுக்கு 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கினார்.

  அப்போது அவர் பேசுகையில் குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக குடிசை மாற்று வாரியத்தை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தற்போது தமிழகத்தில் குடிசைகளே இல்லாமல் அனைத்தும் பசுமையான வீடுகள் இருக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் அவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த கலைஞர் கனவு இல்ல திட்டமானது கிராமப்புற பகுதிகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

  ஆம்பூர் பகுதியில் உள்ள பெத்தலகேம் பகுதியில் கடந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது அப்பகுதியில் மழையின் காரணமாக ரயில்வே மேம்பாலம் கீழே தண்ணீர் முட்டி அளவு தேங்கி இருந்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

  அப்போது நான் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே இருந்தேன்.  அன்று அப்பகுதி மக்களுக்கு நாங்கள் ஆட்சி அமைத்தால் மேம்பாலம் கட்டி தரப்படும் என்று கூறியதன் அடிப்படையில் தற்போது தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் சட்டமன்ற கூட்டத்தொடரில் ரெட்டி தோப்பு மேம்பாலம் கட்டித் தரப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார் என்று கூறினார்.

  இதையடுத்து செங்கிலி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த  மாற்றுத்திறனாளி ரமேஷ் தனக்கு இசைக்கருவி வாங்கி கொடுத்த அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கு நன்றி கூறினார்.